சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ ஷூட்டிங் நிறைவுற்றது

சிம்பு,  சித்தி இட்னானி
சிம்பு, சித்தி இட்னானி

சிம்பு நடிக்கும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

’மாநாடு’ பட வெற்றியை அடுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை அடுத்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

நடிகை ராதிகா, சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர்கள் சித்திக், நீரஜ் மாதவ், முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் திருச்செந்தூர் அருகே நடந்தது. பின்னர் காரைக்குடி, சென்னை, மும்பையில் நடந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கூடவே, சிம்பு துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில், தெரிவிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in