விவாதிக்க மறுக்கப்படும் விஷயங்கள்: ரசிகர்களுடன் உரையாடுகிறார் ஸ்ருதி

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

தனது பிறந்தநாளை முன்னிட்டுப் பல்வேறு தலைப்புகளில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார், நடிகை ஸ்ருதிஹாசன்.

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வரும் 28-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், ரசிகர்களுடன் ஸ்ருதிஹாசன் உரையாட முடிவு செய்துள்ளார். மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார்.

இதன் மூலம் பொதுவாக சமூகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விஷயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன், பல்வேறு செல்வாக்குமிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து விவாதிப்பார். நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விஷயங்களைப் பற்றி உரையாடலை நிகழ்த்தி, அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறும்போது, “நேரடி அமர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் விவாதத்தை, உரையாடலை தொடங்கவேண்டும் என்பதுதான். இந்தத் தலைப்புகளில் நிகழும் உரையாடலில் மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்கள் குறித்து அவர்களைச் சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்கவேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in