ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் ஆணாதிக்கம் இருக்கிறது: நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் ஆணாதிக்கம் இருக்கிறது: நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

சமூகத்தில் இருப்பது போலவே சினிமாவிலும் ஆணாதிக்கம் இருக்கிறது என நடிகை ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவை பொருத்தவரை கதாநாயகர்களை மையப்படுத்திய கதையே அதிகம் வருகிறது. அதில் கதாநாயகிகள் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்த படுகிறார்கள் என்ற நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதில் இருந்து நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள், கதாநாயகர்களுக்கு இணையாக கதையில் முக்கியத்துவம் இருந்து வந்தாலும், சமூகத்தின் பிரதிபலிப்பாகவே சினிமாவிலும் இந்த ஆணாதிக்கம் தொடர்கிறது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் நடிகை ஷ்ருதிஹாசன்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: சினிமாவில் மட்டுமல்லாது, நம் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் ஆணாதிக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் என்ன பார்க்கிறோமோ அது தான் சினிமாவாக உருவாக்குகிறோம். ஆனால், சில சமயங்களில் இது குழப்பமான நிலைக்கும் நம்மைத் தள்ளும். என்னைக் கேட்டால், பெரும்பாலும் கலை நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார்.

சமீபத்தில் திரைத்துறைக்கு வந்து 13 வருடங்களை நிறைவு செய்தார் நடிகை ஷ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் தமிழில் கடைசியாக ‘லாபம்’ படத்தில் நடித்தார். தற்போது, தெலுங்கில் பிரபாஸூடன் ‘சலார்’, சிரஞ்சீவியுடன் ஒரு படம் மற்றும் நடிகர் பாலகிருஷ்ணாவின் படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in