அதர்வாவின் `நிறங்கள் மூன்று’ ஷூட்டிங் நிறைவு

அதர்வாவின் `நிறங்கள் மூன்று’ ஷூட்டிங் நிறைவு

அதர்வா நடிக்கும் ’நிறங்கள் மூன்று’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று விட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

'துருவங்கள் பதினாறு' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன் . இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்து அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடித்த ’மாஃபியா’ என்ற படத்தை இயக்கினார். சுமாராக ஓடியது. இதையடுத்து தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த ’மாறன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இதை அடுத்து அவர் இயக்கியுள்ள படம், ’நிறங்கள் மூன்று’. அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமான இதற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in