குளு மணாலியில் நிறைவு பெற்றது ஆர்யாவின் ’கேப்டன்’

குளு மணாலியில் ’கேப்டன்’ படக்குழு
குளு மணாலியில் ’கேப்டன்’ படக்குழு

ஆர்யா நடிக்கும் ’கேப்டன்’ படத்தின் படப்பிடிப்பு குளு மணாலியில் நிறைவடைந்தது.

‘டெடி’ படத்தை அடுத்து, ஆர்யாவும், சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற சயின்ஸ் பிக்சன் படத்தில் இணைந்துள்ளனர். இதில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

சக்தி செளந்தர் ராஜன், ஆர்யா
சக்தி செளந்தர் ராஜன், ஆர்யா

இதை திங் ஸ்டூடியோஸ் நிறுவனம், ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.

முக்கிய காட்சிகளை வட இந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, குளு மணாலியில் இறுதிக் கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளது. அத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in