போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் விடுவிப்பு!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் விடுவிப்பு!

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சித்தாந்த் கபூர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பிரம்மாண்ட பார்ட்டி நடந்தது. அதில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்தவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

ஷ்ரத்தா கபூருடன் சித்தாந்த் கபூர்
ஷ்ரத்தா கபூருடன் சித்தாந்த் கபூர்

அவர்களை கைது செய்த போலீஸார், ரத்த பரிசோதனை செய்தனர். அதில் 5 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் விசாரித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், இந்தி நடிகர் சித்தாந்த் கபூர். இவர் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் .

தொடர்ந்து அவர்களை விசாரித்த போலீஸார், காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in