காதலரை கரம் பிடித்த 'செவ்வந்தி' சீரியல் நடிகை!

கணவர் பார்கவுடன் நடிகை ரம்யா கவுடா
கணவர் பார்கவுடன் நடிகை ரம்யா கவுடா

’செவ்வந்தி’ சீரியல் நடிகை தன் காதலரை திருமணம் செய்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செவ்வந்தி’. இதில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கவுடா நடித்து வந்தார். ஆனால், சில தினங்களுக்கு முன்பு ரம்யா அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

இந்த நிலையில், தனது காதலர் பார்கவுடன் திருமணம் செய்துள்ள புகைப்படங்களை ரம்யா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்களது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. ரம்யா மற்றும் பார்கவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பார்கவுடன், ரம்யா கவுடா
பார்கவுடன், ரம்யா கவுடா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in