அறிமுக இயக்குநர் படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
’பகாசூரன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரங்கநாதன் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் யோகிபாபு மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் இயக்குநர் பகிர்ந்து கொண்டதாவது, “பல பிரச்சினைகளை பற்றி பேசக்கூடிய பொலிட்டிக்கல்-ட்ராமாவாக இந்தத் திரைப்படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகளை திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் மற்றும் சிறுமலை ஆகிய பகுதிகளில் படமாக்க இருக்கிறோம். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. செல்வராகவன் ராம் என்ற கதாபாத்திரத்திலும், சுனில் மஹவுத் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். யோகிபாபு நகரத்தில் இருக்கக்கூடிய சிறு வியாபாரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.