13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக மீண்டும் களமிறங்கும் சசிகுமார்!

சசிகுமார்
சசிகுமார்13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக மீண்டும் களமிறங்கும் சசிகுமார்!

'ஈசன்' திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்கத்திற்குத் திரும்புகிறார்

‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். அதன் பிறகு 2010-ல் ‘ஈசன்’ படத்தை மட்டும் இயக்கி இருந்தார். பிறகு கடன் பிரச்சினைகள் காரணமாக ‘போராளி’, ‘பேட்ட’, ‘அயோத்தி’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார்.

இப்போது 13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக மீண்டும் களமிறங்குகிறார் சசிகுமார். தன்னுடைய சமீபத்திய பேட்டிகளில் கூட தன் கடன் பிரச்சினைகள் முடிந்து விட்டதாகவும் விரைவில் இயக்கத்துக்குத் திரும்ப இருக்கிறேன் எனவும் கூறியிருந்தார் சசிகுமார்.

இதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கிராமத்துப் பின்னணியைக் கொண்டு பீரியாடிக் கதையாக இது உருவாக இருக்கிறது. ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் யார், தொழில்நுட்பக்குழு குறித்தான விவரம் போன்றவற்றை விரைவில் படக்குழு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in