நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதர்வா முரளி நடிப்பில் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதே ஆண்டு, இவர் முதன்முதலில் நடித்த ‘மாஸ்கோவின் காவிரி’ பல்வேறு தடைகளுக்குப் பின் ரிலீஸானது. அதன்பின்னர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். ‘நான் ஈ’, ‘அஞ்சான்’, ‘கத்தி’, ‘24’, ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிரபலமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக திரைப்பங்களில் நடிப்பதற்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா, இப்போது உடல்நிலை சீரான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இன்று ஏப்ரல் 28 ஆம் தேதி 37 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பல திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
சமந்தா இப்போது ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் 'மா இண்டி பங்காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் பற்றிய முழுமையான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, ‘மின்னுவது எல்லாம் பொன்னல்ல’ என்று குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் சமந்தா வெளியிட்டுள்ள வித்தியாசமான போஸ்டரால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.