‘புஷ்பா2’ படத்தில் சமந்தா இருக்கிறாரா என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பதிலளித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2021-ல் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் மட்டுமில்லாமல் ‘ஓ சொல்றியா’, ‘ஸ்ரீவள்ளி, ‘சாமி சாமி’ ஆகிய பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு மற்றும் புரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ‘where is pushpa?’ என்ற கான்செப்ட் போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் போர்ஷன் அதிகம் இருப்பதையும் படக்குழு உறுதி செய்தது. இந்த நிலையில், முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் சமந்தா இருப்பாரா, பாடல்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘’புஷ்பா2’ படத்தில் ‘ஓ சொல்றியா’ பாடலைப் போல இன்னொன்று சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் அதிக சர்ப்ரைஸ் இந்த பாகத்தில் இருக்கிறது. முதல் பாகத்திற்கு நீங்கள் தந்த அன்பு போலவே, இரண்டாம் பாகத்திற்கும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.