பஞ்சாப் தாதா கொலை மிரட்டல்: நடிகர் சல்மான் கானுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிய போலீஸார்!

பஞ்சாப் தாதா கொலை மிரட்டல்: நடிகர் சல்மான் கானுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிய போலீஸார்!

நடிகர் சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸார் உரிமம் வழங்கியுள்ளனர்.

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா, மே மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையை பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், அவர் தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சல்மான் கான் 1998-ம் ஆண்டு ஜோத்பூர் காட்டில் அரியவகை மான்களை வேட்டையாடியதாக வழக்குத் தொடரப்பட்டது. அந்த அரியவகை மான், பிஷ்னோய் சமுதாயத்தின் புனித விலங்கு என்பதால், லாரன்ஸ் பிஷ்னோய் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி, மும்பை போலீஸ் ஆணையர் விவேக் பன்சால்கரை நடிகர் சல்மான் கான் சமீபத்தில் சந்தித்தார். இணை ஆணையர் விஸ்வாஸ் பாட்டீலையும் அவர் சந்தித்தார். பின்னர் அவரது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரைக் குண்டுகள் துளைக்காத வகையில், புல்லட் புரூப் கண்ணாடிகளைப் பொருத்தி மாற்றி இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in