
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை வெளியாக உள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் லியோ படத்திற்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே பட வசூலில் கிடைக்கும் தொகையை பகிர்வு செய்து குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் இந்த நடவடிக்கையை திரையரங்க நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!