நடிகர் கார்த்தியுடன் ராஷ்மிகா மந்தனா மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ல் நடிகர் கார்த்தியுடன் 'சுல்தான்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு 'ஜப்பான்' படத்தில் மீண்டும் ராஷ்மிகா மந்தனா கார்த்தியுடன் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜூ முருகனுடன் நடிகர் கார்த்தி இணைய இருக்கும் படத்திற்கு 'ஜப்பான்' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, கார்த்தியின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. அதற்கடுத்து, அக்டோபர் மாதம் தீபாவளி ரிலீஸாக 'சர்தார்' படம் வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்து 'ஜப்பான்' திரைப்படம் தொடங்க உள்ளதாகவும், இந்தப் படத்தில்தான் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா பேசப்பட்டு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ராஜூ முருகன் கடைசியாக 'ஜிப்ஸி' படத்தை இயக்கி இருந்தார். தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் வசனம் எழுதியுள்ளார். இதனை அடுத்து 'ஜப்பான்' பட வேலைகள் தொடங்க இருக்கிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.