ஷங்கர் பட பஞ்சாப் ஷெட்யூல் நிறைவு: `ஆச்சார்யா’வுக்கு திரும்பிய ராம் சரண்

ஷங்கர் பட பஞ்சாப் ஷெட்யூல் நிறைவு: `ஆச்சார்யா’வுக்கு திரும்பிய ராம் சரண்

ஷங்கர் இயக்கும் படத்தின் பஞ்சாப் ஷெட்யூல் முடிவடைந்ததை அடுத்து, ’ஆச்சார்யா’ புரமோஷனுக்கு திரும்பி இருக்கிறார் நடிகர் ராம் சரண்.

ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ஆர்.சி 15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.

அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு, ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி பகுதிகளில் நடந்தது.

அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்து வந்தது. இன்றுடன் அங்கு நடந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள ராம் சரண், விமானத்தில் ஐதராபாத் திரும்பியுள்ளார். தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள அவர், அடுத்து ’ஆச்சார்யா’ புரமோஷனுக்கு திரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி, காஜல் அகரவால், ராம் சரண், பூஜா ஹெக்டே நடித்துள்ள ’ஆச்சார்யா’வை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் 29 -ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in