`ஷங்கர் படத்தில் அது உண்மைதான்’: ஒப்புக்கொண்டார் ராம் சரண்!

`ஷங்கர் படத்தில் அது உண்மைதான்’: ஒப்புக்கொண்டார் ராம் சரண்!

``ஷங்கர் இயக்கும் படத்தில் பலவித கெட்டப்புகளில் நடிக்கிறேன்'' என்று நடிகர் ராம் சரண் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. RC15 என தற்காலிகப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரண் நடுத்தர வயது முதல் வயதானவர் வரை பல கெட்டப்புகளில் வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது உண்மைதான் என்று நடிகர் ராம் சரண் ஒப்புக் கொண்டுள்ளார்.

’ஆச்சார்யா’ பட புரமோஷனில் பங்கேற்ற அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ``ஷங்கர் இயக்கும் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறேன். பலவித கெட்டப்புகள் எனக்கு இதில் இருக்கிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது’' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in