ரஜினி படத்தின் தயாரிப்பாளருக்கு ஆறு மாத சிறை தண்டனை!

ரஜினி படத்தின் தயாரிப்பாளருக்கு ஆறு மாத சிறை தண்டனை!

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2014ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் வெளியானது. இந்த படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.  படுதோல்வி அடைந்தது. இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் முரளி மனோகர் தயாரித்திருந்தார்.

நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும்  இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபிர் சந்த் நாகருக்கு,  திரைப்பட தயாரிப்பாளர் முரளி மனோகர் ஐந்து கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக முரளி மனோகர் காசோலை அளித்திருந்தார். ஆனால் அது  பணமில்லாமல் திரும்பியது.

முரளி மனோகர்
முரளி மனோகர்

இது தொடர்பாக அபிர் சந்த் நாகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம் 9% வட்டியுடன் ரூ. 7.70 கோடியை அபிர் சந்த் நாகருக்கு வழங்க வேண்டுமென முரளி மனோகருக்கு உத்தரவிட்டது. மேலும் 6 மாத சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் சென்னை விரைவு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in