`எம்.ஜி.ஆர் சொன்னது அப்போது புரியவில்லை'- ‘பொன்னியின் செல்வன்’ விழாவில் கமல் சொன்ன தகவல்

`எம்.ஜி.ஆர் சொன்னது அப்போது புரியவில்லை'- ‘பொன்னியின் செல்வன்’ விழாவில் கமல் சொன்ன தகவல்
ARUNPRASATH

‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் ரஜினி குறித்து பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பங்கு பெற்ற நடிகர் கமல்ஹாசன் மேடையில் பேசும்போது, ``எங்கே இருந்து இதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார். அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன்.

என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை. ’ஷோலே’ மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கிறோம். அது சாத்தியமானது. இந்த படமும் போல தான்.

இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரே என அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது.

இன்று ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம் ரவியும் நடித்திருக்கிறார்கள்.
வெற்றி வரும், தோல்வி வரும். ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும். ஏ.ஆர். ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன்’ என்று நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in