
ரஜினியின் ஆன்மிக ஈடுபாடு என்பது அவருடைய அம்மாவிடமிருந்து அவருக்குள் கிளைத்தது. அவருடைய தயார் காலையும், மாலையும் தவறாமல் கோயிலுக்குப் போய் பூஜை செய்பவராக இருந்தார். வாரந்தோறும் பஜனை மடங்களுக்குச் செல்லும் வழக்கமும் அவருக்கு உண்டு. 5 வயதில் அம்மாவை இழந்த பிறகு தாயில்லா ஏக்கம் ரஜினியை முரட்டுக் குழந்தையாக மாற்றியது. ரஜினியின் பால்ய முரட்டுத்தனத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய அண்ணியார் கலாவதி, ரஜினி 12 வயதுச் சிறுவனாக இருந்தபோது கோசாயி மடத்தில் சேர்த்து லங்கபாரதி ஸ்வாமிகள் என்பவரிடம் யோகாவையும், தியானத்தையும் கற்க வைத்தார். பின்னர், ராமகிருஷ்ண மடத்துக்குப் போய் ராமசந்திர ஸ்வாமி, புருஷோத்தம ஸ்வாமி ஆகியோரிடம் வேத மந்திரங்களையும் கற்றார் ரஜினி.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.