`புஷ்பா’ இயக்குநரின் சம்பளம் இத்தனை கோடியா?

`புஷ்பா’ இயக்குநரின் சம்பளம் இத்தனை கோடியா?

’புஷ்பா’ இயக்குநர் தனது அடுத்த பாகத்துக்கான சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகி. மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. நடிகை சமந்தா ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்தது.

சுகுமார், அல்லு அர்ஜுன்
சுகுமார், அல்லு அர்ஜுன்

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்துப் பகுதியிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைப் படக்குழு தொடங்கி இருக்கிறது. ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. முதல் பாகத்தின் இந்தி பதிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இரண்டாம் பாகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்க இருக்கின்றனர்.

இதற்கிடையே, இந்தப் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் சுகுமாரும் தனது சம்பளத்தை ரூ.40 கோடியாக உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ராஜமவுலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் லாபத்தில் பங்கு என்ற முறையில் கேட்பதால், அவர் சம்பளம் ரூ.100 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இயக்குநர் ஷங்கர், அதற்கடுத்த இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், சம்பள விவகாரத்தில் அந்த இரண்டாம் இடத்துக்கு சுகுமாரும் முன்னேறி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in