ஏப்ரலில் தொடங்குகிறது ’புஷ்பா 2’ படப்பிடிப்பு

ஏப்ரலில் தொடங்குகிறது ’புஷ்பா 2’ படப்பிடிப்பு

’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

அல்லு அர்ஜுன் நடித்து வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மலையாள ஹீரோ பஹத் பாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இவர் இசையில், ஸ்ரீவள்ளி, சாமி சாமி, ஊ சொல்றியா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுகுமார், தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன்
சுகுமார், தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன்

வட மாநிலங்களில் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. படப்பிடிப்புக்கான முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அதற்கு முன் படக்குழு, பாடல் கம்போசிங்கிற்காக வெளிநாடு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுகுமார், இரண்டாம் பாகத்திலும் பாடல்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in