'சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்து விட்டது!’ சர்ச்சையைக் கிளப்பிய தமிழ் பட தயாரிப்பாளர்!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

ஒரு சூப்பர் ஸ்டாரின் காலம் என்பது முடிவுக்கு வந்து விட்டது என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினிக்கு 72 வயது ஆன போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி உங்களுக்கும் நின்றால் தான் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என கலாநிதி மாறன் பேசியுள்ளார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ‘திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்து விட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர்.

ஒவ்வொரு படத்திற்கும், வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பு மாறுபடும். இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையை உயர்கிறது மற்றும் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு இண்டஸ்ட்ரி. அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in