நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் முதல் முறையாக மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க மிருகங்களை வைத்து படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து எடுத்து வருகிறார். 'புதிய பாதை' படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் துவக்கிய பார்த்திபன், திரையரங்கை மையப்படுத்தி எடுத்த 'ஹவுஸ்புல்' திரைப்படம் பல்வேறு விருதுகளைக் குவித்தது.
இதன் தொடர்ச்சியாக ஒரே ஒருவர் நடித்த பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான அவரது ’இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதலில் வெளியான சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பார்த்திபன் தனது அடுத்த முயற்சியாக மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க மிருகங்களை வைத்து படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க விலங்குகள் நடிப்பது போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், உண்மையான விலங்குகளை வைத்து முழுக்க முழுக்க ஒரு திரைப்படம் பார்த்திபன் எடுப்பது உலகில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.