`ஊ சொல்றியா’ டான்ஸ் மாஸ்டர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண் உதவி நடன இயக்குநர் கொடுத்த பாலியல் புகாரில் நடவடிக்கை
கணேஷ் ஆச்சார்யா
கணேஷ் ஆச்சார்யா

பெண் உதவி நடன இயக்குநர் கொடுத்த பாலியல் புகாரில் பிரபல நடன இயக்குநர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ’ரவுத்திரம்’. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா. சென்னையில் பிறந்த இவர், இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குநராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

கணேஷ் ஆச்சார்யா
கணேஷ் ஆச்சார்யா

சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய ’ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கும் இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.

35 வயது பெண் உதவி நடன இயக்குநர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது கடந்த 2020-ம் வருடம் அம்போலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருந்தார். அதில், கணேஷ் ஆச்சார்யா, தன்னைத் துன்புறுத்தியதாகவும் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும் ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை கணேஷ் மறுத்திருந்தார். இந்நிலையில் போலீஸார் அவர் மீது 8 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஓஷிவாரா போலீஸ் அதிகாரி சந்தீப் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in