பாலியல் வன்கொடுமை: நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற மிரட்டல்!

பாலியல் வன்கொடுமை: நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற மிரட்டல்!

நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில், தலைமறைவாக இருக்கும் நடிகர் விஜய் பாபுக்கு வந்த வெளிநாட்டு முதலீடு பற்றி போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

மலையாள இளம் நடிகை ஒருவர், கொச்சி போலீஸில் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். கடந்த 2-ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொச்சி போலீஸார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர், மே 19-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்று மெயிலில் பதிலளித்தார்.

ஏற்க மறுத்த போலீஸார், அவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், திரைப்படங்கள் தயாரிப்பதற்காக அவர் பெற்ற வெளிநாட்டு நிதி பரிவர்த்தனைகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உள்ளனர்.

துபாய், குவைத், கத்தார் உள்பட வெளிநாடுகளில் உள்ள சிலர், தங்கள் கருப்புப் பணத்தை, விஜய் பாபு மூலம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாகக் கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே,விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த இளம் நடிகையையும் மற்றொரு பெண்ணையும் பணம் கொடுத்து சமரசம் செய்ய தொழிலதிபர் ஒருவர் முயன்றதாகவும் அவர், அவர்களை மிரட்டியதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in