பிரபல நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

மோசடி வழக்கில் மொரதாபாத் நீதிமன்றம் அதிரடி
சோனாக்‌ஷி சின்ஹா
சோனாக்‌ஷி சின்ஹா

மோசடி வழக்கில் பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. தமிழில், ரஜினிகாந்தின் ’லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் ரூ.37 லட்சம் முன்பணம் வாங்கியிருந்தாராம்.

சோனாக்‌ஷி சின்ஹா
சோனாக்‌ஷி சின்ஹா

ஆனால், கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கு வர அவர் மறுத்துவிட்டதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரமோத் சர்மா என்பவர், உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தன் மீதான இந்தப் புகாரை சோனாக்‌ஷி ஏற்கெனவே மறுத்திருந்தார். யாரோ ஒருவர் கூறும் அபாண்டமான புகாரை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏப்ரல் 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in