திருமணக் கொண்டாட்டம் ஓவர்: படப்பிடிப்புக்குத் திரும்புகிறார் நயன்தாரா

திருமணக் கொண்டாட்டம் ஓவர்: படப்பிடிப்புக்குத் திரும்புகிறார் நயன்தாரா

திருமணக் கொண்டாட்டம் முடிவடைந்ததை அடுத்து நடிகை நயன்தாரா படப்பிடிப்புக்குத் திரும்புகிறார்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திரையுலகினர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து கேரளா சென்ற அவர்கள், உடல் நலப்பிரச்சினை காரணமாக திருமணத்திற்கு வர இயலாமல் இருந்த நயன்தாராவின் தாயாரிடம் ஆசி பெற்றனர்.

தொடர்ந்து, ஆலப்புழாவில் உள்ள மிகவும் பழமையான செட்டிக்குளங்கரா கோயி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் திருவில்லாவில் உள்ள நடிகை நயன்தாராவின் உறவினர் வீடுகளுக்கு சென்று விருந்து சாப்பிட்டனர். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி ஓரிரு நாளில் சென்னை திரும்புகிறது.

நடிகை நயன்தாரா, இப்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ’ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா அடுத்த வாரம் கலந்துகொள்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in