குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்தாரா!

நயன்தாரா
நயன்தாராகுழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா தன் இரட்டைப் பிள்ளைகளின் பெயர்களை அறிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நான்கு மாதங்களிலேயே இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன செய்தியை அறிவித்திருந்தனர். இந்த செய்தியை பகிர்ந்தபோதே ‘உயிர், உலகம்’ என பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன். மேலும், அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும்படியான புகைப்படங்களை இவர் பகிர்வது இணையத்தில் வைரல் ஆகும்.

இந்தநிலையில், சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் தன் இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். அதன்படி, உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்வேக் என் சிவன் ஆகியவைதான் பெயர்கள். நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், நடிகர் ஜெய்யுடன் 75-வது படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in