வீடு துடைக்கும் மாப் குச்சியில் பறந்த தேசியக்கொடி: சர்ச்சையில் நடிகர் சூரி

வீடு துடைக்கும் மாப் குச்சியில் பறந்த தேசியக்கொடி: சர்ச்சையில் நடிகர் சூரி

வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக்கொடியை நடிகர் சூரி பறக்கவிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மக்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றினர். இந்த புகைப்படத்தை பலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் சூரி, சென்னையில் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார். அதன் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு. பெருமைக்குரிய இந்தியன் என்று குறிப்பிட்டுள்ளார். வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக்கொடியை சூரி ஏற்றி இருக்கிறார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in