‘அரக்கன் ஒருவன் இல்லையென்றால் இறைவன் மகிமை தெரியாது’ - வெளியானது ‘நானே வருவேன்’ 2வது பாடல்!

‘அரக்கன் ஒருவன் இல்லையென்றால் இறைவன் மகிமை தெரியாது’  - வெளியானது ‘நானே வருவேன்’ 2வது பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரே ஒரு ஊருக்குள்ள ரெண்டு ராஜா’ என்ற 2வது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘ நானே வருவேன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 2வது பாடலான ‘ஒரே ஒரு ஊருக்குள்ள ரெண்டு ராஜா’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தனுஷும் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலிலேயே ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற மாஸ்ஹிட் படங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. ஹீரோ, வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவையும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர். மிக பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் இந்தப் படமும் இம்மாத இறுதியில் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரெண்டு ராஜா பாடலின் லிரிக் வீடியோ...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in