இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் பிரம்மாண்ட ’பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கி இருக்கிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த சில நாடகளுக்கு முன், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் கூறியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in