`பொன்னியின் செல்வன்' படத்தை வெளியிடத் தடை: இணைய தள சேவை நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

`பொன்னியின் செல்வன்' படத்தை வெளியிடத் தடை: இணைய தள  சேவை நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

`பொன்னியின் செல்வன் -1' திரைப்படத்தைச்  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட 29 சேவை வழங்கும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில்  பொன்னியின் செல்வன் -1 திரைப்படம்  நாளை உலகம்  முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை இந்தியாவில் பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல், உள்ளிட்ட 29 இணைய தள  சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405  இணையதளங்களில்  வெளியிடத் தடை விதிக்க வேண்டுமெனப் படத் தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா  நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ”மிகுந்த பொருட் செலவில் படத்தைத் தயாரித்து உள்ளார்கள். சட்டவிரோதமாகப் படத்தைத்  திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெருத்த நட்டம் ஏற்படும். இதனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்” என வாதிட்டார். இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தைச்  சட்டவிரோதமாக  இணையதளங்களில் வெளியிட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in