’அவர் திருமணமானவர் என்றதும் அதிர்ந்தேன்’: ராக்கி சாவந்த்

ராக்கி சாவந்த், ரிதேஷ்
ராக்கி சாவந்த், ரிதேஷ்

தனது கணவரை பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்று அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார். இவர், தொழிலதிபர் ரிதேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தி ‘பிக் பாஸ் 14’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராக்கி சாவந்த், தனது கணவர் ரிதேஷை அறிமுகப்படுத்தினார். ரிதேஷ், ஏற்கெனவே திருமணம் ஆனவர்.

இதற்கிடையே, ரிதேஷின் முதல் மனைவி ஸ்னிக்தா பிரியா, அவர் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதற்கு பதிலளித்த ராக்கி, தனது கணவர் ரிதேஷ் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் அவர் அன்பானவர், பாசமானவர் என்றும் புகழ்ந்து கூறியிருந்தார்.

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ரிதேஷ், ராக்கி
’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ரிதேஷ், ராக்கி

இந்நிலையில் ரிதேஷை பிரிந்துவிட்டதாக சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் ராக்கி அறிவித்தார். இப்போது, தனது கணவரைப் பிரிந்தது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

"பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததும், மும்பையில் உள்ள என் வீட்டில் நாங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். அவர் திடீரென தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். தனது மனைவியிடம் விவாகரத்து பெறவில்லை என்பதால் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் அதனால் தொடர்ந்து என்னுடன் வாழ முடியாது என்றும் சொன்னார்.

அவருடன் எனக்கு நடந்தது சட்டப்பூர்வமான திருமணம் அல்ல. அவருக்கு ஏற்கெனவே மனைவியும் குழந்தைகளும் இருந்தது எனக்குத் தெரியாது. அதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அவரை கண்மூடித்தனமாக நம்பியதற்கு அவர் செய்தது இதைத்தான். இப்போதும் அவர், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்தால், நான் காத்திருப்பேன். அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தால் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். என்னைப் பொறுத்தவரை காதலும் திருமணமும் நகைச்சுவை அல்ல".

இவ்வாறு ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in