'லியோ' படத்திற்கு ஒரே ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டும் தான் அனுமதியா?... இன்று வழக்கு விசாரணை!

‘லியோ’படத்தில் விஜய், த்ரிஷா
‘லியோ’படத்தில் விஜய், த்ரிஷா
Updated on
1 min read

'லியோ' பட சிறப்பு காட்சி தொடர்பாக பட நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, ’லியோ’ படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

‘லியோ’படத்தில் விஜய், த்ரிஷா
‘லியோ’படத்தில் விஜய், த்ரிஷா

ஆனால், அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in