வாட்டும் வறுமை; 2 சிறுநீரகமும் பாதிப்பு: அரசு மருத்துவமனையில் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி அனுமதி

வாட்டும் வறுமை; 2 சிறுநீரகமும் பாதிப்பு: அரசு மருத்துவமனையில் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி அனுமதி

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை நேரில் சந்தித்து வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயக்குமாரி. அந்த காலத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்தனர் ஜெயக்குமாரி. 6 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், 14 வயதில் `நாடோடி' என்ற படத்தில் அறிமுகமானார். நூற்றுக்கு நூறு, தேடி வந்த லட்சுமி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, எங்கிருந்தோ வந்தால், வைரம், ரிக் ஷாக்காரன், பிஞ்சு மனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 72 வயதான இவர், தனது மகனுடன் வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயக்குமாரிக்கு தற்போது, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனது. பணம் இல்லாததால், அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, நடிகர் சங்கம் உதவ முன்வர வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் ஜெயக்குமாரிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், ஜெயக்குமாரிக்கு வீடு மற்றும் உதவித்தொகை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in