தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை: கே.டி.குஞ்சுமோன் வருத்தம்

கே.டி.குஞ்சுமோன்
கே.டி.குஞ்சுமோன்

சினிமாவில் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை என்றும் யாரும் உதவுவதில்லை என்றும் கே.டி.குஞ்சுமோன் வருத்தத்துடன் கூறினார்.

ஆனந்த்ராஜ் இயக்கத்தில், அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காமெடி திரைப்படம் ’கடலை போட பொண்ணு வேணும்’. ராபின்சன் தயாரித்துள்ளார். ஓர் இரவில் நடக்கும் கதையாக இது உருவாகி இருக்கிறது. விரைவில் திரைக்குவரவுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

’கடலை போட பொண்ணு வேணும்’ பாடல் வெளியீட்டு விழா
’கடலை போட பொண்ணு வேணும்’ பாடல் வெளியீட்டு விழா

விழாவில் பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசுகையில், `சினிமா விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பாடல்கள் அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறைய செலவு செய்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் அதிக படங்களை நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன். ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும். மணிரத்னத்தின் ’நாயகன்’ படத்தை முதலில் விநியோகம் செய்ய மாட்டேன் என்று மறுத்தேன். அவர் அண்ணன் ஜீவி, நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காக பண்ணினேன். ’நாயகன்’ படம் எனக்கு லாபம் இல்லை. இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை. மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலைதான் இங்கு இருக்கிறது. தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை’ என்றார்.

விழாவில் நாஞ்சில் சம்பத், மன்சூரலிகான், தயாரிப்பாளர் கே.ராஜன், ராபின் இசையமைப்பாளர் ஜிபின், நடிகர் ராதாரவி உட்பட பலர் பேசினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in