`என் மனைவியை பின் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்'- பிரபல நடிகையின் கணவர் போலீஸில் புகார்

கேத்ரினா கைஃப், விக்கி கவுசல்
கேத்ரினா கைஃப், விக்கி கவுசல்

பிரபல நட்சத்திர தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் கேத்ரினா கைஃப். இவர் 2003-ம் ஆண்டு வெளியான ‘பூம்’ படம் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் விக்கி கவுசலும் 2019-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.

பின்னர் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கேத்ரினா கைஃப், விக்கி கவுசல்
கேத்ரினா கைஃப், விக்கி கவுசல்

நடிகை கேத்ரினா கைஃப் இப்போது, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கேத்ரினாவும் விக்கி கவுசலும் மாலத்தீவு சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில், தனக்கும் தனது மனைவிக்கும் சமூக வலைதளத்தில் மர்மநபர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தன் மனைவியை அவர் பின் தொடர்ந்து மிரட்டுவதாகவும் நடிகர் விக்கி கவுசல், மும்பை சாந்தாகுரூஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

நடிகர் சல்மான் கானுக்கும் அவர் தந்தை சலீம் கானுக்கும் சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நடிகை கேத்ரினா, நடிகர் விக்கி கவுசல் ஆகியோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in