`ஜிகர்தண்டா’ படத்தின் அடுத்த பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சித்தார்த், லட்சுமிமேனன், நாசர், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்த படம், ’ஜிகர்தண்டா’. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கதிரேசன் தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றிருந்தது. இது இந்தியில் பச்சன் பாண்டே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. இதில் அக்ஷய்குமார் நடித்திருந்தார்.
இந்நிலையில் `ஜிகர்தண்டா' படத்தின் அடுத்த பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க இருப்பதாகவும் பாபி சிம்ஹா அதே கேரக்டரில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘மகான்’ படம் சில மாதங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு அவர் கதை எழுதியுள்ளார். இதையடுத்து `ஜிகர்தண்டா' படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார்.