`நடிகைகளை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறாய்'- இசை விழாவில் கே.ராஜன்- பயில்வான் ரங்கநாதன் கடும் மோதல்!

தயாரிப்பாளர் கே.ராஜன்
தயாரிப்பாளர் கே.ராஜன்

`கட்சிக்காரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜனுக்கும் நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னையில் `கட்சிக்காரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாநேற்று நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய கே.ராஜன், "இந்த சால்வை தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதல்ல. ராஜஸ்தானில் இருந்து இந்த சால்வையை தயாரித்து இருக்கிறார்கள். அங்கேயும் ஒரு நெசவாளி தான் இந்த சால்வையை தயாரித்து இருப்பார். இதனுடைய பயன் என்ன? தோளில் போட்டீங்க. அதன் பின் தூக்கி வீசிவிட்டு போகிறோம். இதில் ஏதாவது பயன் இருக்கிறதா? ஒரு கர்ச்சீப் கொடுத்தா கூட முகத்தை துடைப்பதற்கு பயன்படும். அது கைத் தைரியாக இருக்க வேண்டும். கதராக இருக்க வேண்டும். இந்த சால்வை வாங்கி வீணாக்க வேண்டாம்.

இதன் செலவு மொத்தத்தில் வேஸ்ட். சேலம், திருப்பூர், ஈரோட்டில் நம் நெசவாளர்களை நம்பி எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள். தற்போது இந்தியா மிகவும் வளர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். நன்றாக வளரட்டும். ஜிஎஸ்டி வளர்ந்து போய்விட்டது. வருமான வரி கூடி போய்விட்டது. லட்சம் கோடிக்கு மேல் மாதம் ஜிஎஸ்டி வசூல் வருகிறது. வம்பு செய்து வற்புறுத்தி அக்கிரமம் செய்து ஜிஎஸ்டி வரி வசூரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிகாரிகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஆனால்... இப்படி கே.ராஜன் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் பயில்வான் ரங்கநாதன் குறுக்கிட்டு பேசினார். உடனே கே.ராஜன். வந்துவிட்டார் அண்ணன். அண்ணே வாங்க என்று கிண்டலாக கூறினார். செக் பண்ணுவது தானே அண்ணனுடைய வேலை. அண்ணனுக்கு இல்லாத பவரா? நீங்கள் எடுத்து இருக்கிற சப்ஜெட் சாதாரண சப்ஜெட்டா. நல்ல சப்ஜெட் அண்ணே. உட்காருங்கள். இப்போது நான் பேசுவதற்குரிய நேரம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே பயில்வான் ரங்கநாதனுக்கும் கே.ராஜனுக்கும் வாய் தகராறு முற்றியது.

"நீ கேள்வி கேட்கிற நேரம் இது அல்ல. தனியாக பேசிக் கொள்ளலாம். இது உங்கள் கூட்ட மேடை கிடையாது. தயாரிப்பாளர் கூட்ட மேடை" என்று கூறியபோது அங்கிருந்த சிலர் பயல்வான் ரங்கநாதனை சமாதானப்படுத்த முயன்றனர். உடனே கே.ராஜன், தம்பி இது என்ன வேலை என்று கூறியதோடு பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக சீறினார். "நீ ஒவ்வொரு தாய்மார்களையும் நடிகைகளையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறாய். படுக்கை அறையை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறாய். யாரை பேச்சை நிறுத்த சொல்கிறாய்" என்று கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கே.ராஜன். பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கே.ராஜன் - பயல்வான் ரங்கநாதன் இடையே கடுமையான மோதலால் இசை வெளியீட்டு விழா பரபரப்புடன் காணப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in