ஆஸ்கர் இறுதிப் போட்டியில் ’ஜெய்பீம்’: வைரலாகும் ட்வீட்

ஆஸ்கர் இறுதிப் போட்டியில் ’ஜெய்பீம்’: வைரலாகும் ட்வீட்

ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ‘ஜெய் பீம்’செல்லும் என்று சினிமா பத்திரிகையாளரும் விமர்சகருமான ஜாக்குலின் கோலே கூறியுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்த படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆ.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஹாலிவுட்டில் ஆஸ்கருக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. சமீபத்தில் ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் இந்தப் படத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்கர் விருது கமிட்டி ட்விட்டரில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதை சினிமா பத்திரிகையாளரும் விமர்சகருமான ஜாக்குலின் கோலே (Jacqueline coley) தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், ஒருவரின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஜாக்குலின் கோலே ‘சிறந்த படத்துக்கான பரிந்துரையில் ‘ஜெய் பீம்’ - என்னை நம்புங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in