தமிழ் கத்துக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு: கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

``தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து சில மாதங்கள் ஆகிவிட்டன'' என்று நடிகை கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

`எதற்கும் துணிந்தவன்' படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். ‘சூர்யா 41’ என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி அருகே தொடங்கியது. நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு பாலா- சூர்யா கூட்டணி இணைவதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

இதில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது:

நான் நடித்த தெலுங்குப் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாலா என்னை அழைத்தார். சென்னையில் அவரைச் சந்தித்தேன். பிறகு அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார். பாலா சார் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இதில் எனக்கு சவாலான கேரக்டர். அதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். அதனால், இந்த கேரக்டரையும் எதிர்பார்க்கிறேன்.

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

எனக்குப் பிடித்த நடிகர்களுள் ஒருவர் சூர்யா. அவரின் ரசிகை நான். அவர் நடித்துள்ள பல படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர் மீது பெரிய மரியாதை இருக்கிறது. அவருடன் நடிக்கும் முதல் நாளை எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியவில்லை.

லிங்குசாமி இயக்கும் ’தி வாரியர்’ படத்தில் நடிக்கத் தொடங்கியதுமே, தமிழ் கற்கத் தொடங்கிவிட்டேன். தமிழ் இனிமையான மொழி.

இவ்வாறு கீர்த்தி ஷெட்டி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in