`நாயை நடிக்க வச்சு எப்படி படம் எடுத்தாங்கன்னே தெரியலை’ - கார்த்திக் சுப்பாராஜ் ஆச்சரியம்

ரக்‌ஷித் ஷெட்டி,  சங்கீதா சிருங்கேரி
ரக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி

``நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். ’777 சார்லி’ படத்தில் அதை சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்'' என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி தனது பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடித்துள்ள படம், '777 சார்லி’. கிரண்ராஜ் கே. இயக்கியுள்ள இந்தப் படம், சார்லி என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவைக் கதையை கொண்டது. ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நோபின் பால் அமைத்துள்ளார்.

அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜூன் 10-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

777 சார்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினருடன் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா
777 சார்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினருடன் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா

படத்தை தமிழில் வெளியிடும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ``கரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்‌ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்தப்படத்தின் 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். இந்த படம் பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்தப் படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது உறுதியாய் இருக்கிறேன். இயக்குநர் கிரண்ராஜிக்கு இது முதல் படம் என்பது ஆச்சரியம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தின் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. இந்த படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை'' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in