`கே.ஜி.எஃப்' 3-ம் பாகத்தில் வில்லனாகிறாரா பிரபல ஹீரோ?

பிரசாந்த் நீல்
பிரசாந்த் நீல்

கே.ஜி.எஃப் படத்தின் 3-ம் பாகத்தில் பிரபல ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இந்த படம் வெளியானது. ரிலீஸ் ஆன நாளில் இருந்தே வசூலைக் குவித்து வரும் இந்தப் படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து, சாதனைப் படைத்துள்ளது.

நடிகர் யாஷ்
நடிகர் யாஷ்

இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இதற்கிடையே, கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தின் கதை, நடிப்பவர்கள் யார் என்று ரசிகர்கள், சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல நடிகர் ராணா டக்குபதி, கே.ஜி.எஃப் 2 படத்தைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அவருக்குப் பதிலளித்த இயக்குநர் பிரசாந்த் நீல், விரைவில் சந்திப்போம் என்று கூறியிருந்தார். கே.ஜி.எஃப் 3-ம் பாகத்தில் ராணாவை வில்லனாக்கப் போகிறார் என்றும் அதற்காகத்தான் அவரை பிரசாந்த் நீல் சந்திக்க இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

நடிகர் ராணா டக்குபதி
நடிகர் ராணா டக்குபதி

பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படத்தை இப்போது இயக்கி வரும் பிரசாந்த், அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் இல்லை. அதனால், கே.ஜி.எஃப் 3 படத்துக்காகவே ராணாவும் பிரசாந்த் நீலும் சந்திக்க உள்ளனர் என்று அடித்துக் கூறுகிறார்கள் சமூக வலைதளத்தில். இயக்குநர் பிரசாந்த் நீல், தெரிவிக்காதவரை இதன் உண்மைத்தன்மை கேள்விக்குறிதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in