சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா?- ஏ.வெங்கடேஷ் விளக்கம்

‘ரஜினி’ படத்தில் விஜய் சத்யா- ஷெரின்
‘ரஜினி’ படத்தில் விஜய் சத்யா- ஷெரின்

’ரஜினி’ என்று தலைப்பு வைத்திருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா? என்று கேட்பதாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் படம், ’ரஜினி’. கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பு செய்கிறார். படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார்.

விஜய் சத்யா கதாநாயகனாகவும் ஷெரின் நாயகியாகவும் நடித்துள்ளனர். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, பாலா, ஞானசம்பந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசையமைத்துள்ளார். மனோ வி.நாராயணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏ.வெங்கடேஷ்
ஏ.வெங்கடேஷ்

படம் பற்றி ஏ.வெங்கடேஷ் கூறும்போது, ‘’திரில்லர், ஆக் ஷன் கலந்த வித்தியாசமான படம். ’ரஜினி’ என்று பெயர் வைத்ததும் இது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நாயகன் தீவிர ரஜினி ரசிகர். அதனால் படத்திற்கு ’ரஜினி’ என்று தலைப்பு வைத்துள்ளோம்.

விஜய் சத்யா எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது கதை. விஜய் சத்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in