தெலுங்கு சினிமாதான் நம்பிக்கை தந்தது: சூர்யா

சத்யராஜ், ராணா, சூர்யா, பிரியங்கா, பாண்டிராஜ், இயக்குநர்கள் போயபதி சீனு, கோபிசந்த்
சத்யராஜ், ராணா, சூர்யா, பிரியங்கா, பாண்டிராஜ், இயக்குநர்கள் போயபதி சீனு, கோபிசந்த்

``கரோனா காலகட்டத்தில், தெலுங்கு திரைப்படங்கள் பெற்ற வெற்றியால் எங்களுக்கு நம்பிக்கைக் கிடைத்துள்ளது'' என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.

நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ’எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.

இதில் நடிகர் ராணா, தெலுங்கு இயக்குநர் இயக்குநர்கள் போயபதி சீனு, கோபிசந்த் மலினேனி, சத்யராஜ், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சூர்யா, பிரியங்கா அருள் மோகன்
சூர்யா, பிரியங்கா அருள் மோகன்

அப்போது சூர்யா பேசும்போது, `கரோனா காலகட்டங்களில் அகண்டா, புஷ்பா, பங்கர்ராஜூ, பீம்லாநாயக் போன்ற படங்களை தெலுங்கு ரசிகர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். மற்ற சினிமா துறையினருக்கு இது நம்பிக்கையை அளித்துள்ளது. நான் நடித்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பளித்து வருகின்றனர். எனது முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் சிறப்பானதாக இருக்கும். எனது அகரம் அறக்கட்டளை மூலம் நான் பல உதவிகளை செய்துவருகிறேன். இன்று அதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், அதற்கு உத்வேகத்தை அளித்தது நடிகர் சிரஞ்சீவிதான்' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in