`5 தடவை `பதான்' பார்த்துள்ளேன்; 1 கோடி கொடுங்கள்'- ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் நகைச்சுவை பதில்

`5 தடவை `பதான்' பார்த்துள்ளேன்; 1 கோடி கொடுங்கள்'- ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் நகைச்சுவை பதில்

`பதான்' படத்தை 5 தடவை பார்த்துள்ளேன் என்பதால் தனக்கு படத்தின் வசூலில் இருந்து ஒரு கோடி வழங்க வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் ஷாருக்கான் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'பதான்' திரைப்படம். 4 வருட இடைவெளியில் ஷாருக்கான் படம் திரைக்கு வருவதால், பதான் மீதான ரசிக எதிர்பார்ப்புகள் எகிறியது. இதனிடையே, ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் காவி உடையில் அணிந்திருந்த பாடல் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் தியேட்டர்களில் ஷாருக்கான் கட்அவுட்டுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அப்படி இருந்தும் 'பதான்' படம் வசூலில் சாதனை படைத்தது.

இதனிடையே, `பதான்' படத்தை 5 முறை பார்த்த ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் படத்தின் ஒரு கோடி ரூபாய் வசூல் தொகையை கேட்டிருக்கிறார். இதற்கு அவர் ருசிகரமான பதிலும் அளித்திருக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியில் திளைத்திருக்கும் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார், அப்போது ரசிகர் ஒருவர், `பதான்' படத்தை 5 முறை பார்த்திருப்பதாகவும் இதனால் தனக்கு பட வசூலில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஷாருக்கான், பங்குச்சந்தையில் கூட இது போன்ற விகிதத்தை பெற முடியாது என்று நகைச்சுவையுடன் பதில் அளித்து இருக்கிறார். மேலும், பலமுறை `பதான்' படத்தை பார்க்க வேண்டும் என்று ஷாருக்கான் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in