இந்து மத ஸ்தலங்கள் கொள்ளைக்கூடாரமாக மாறி விட்டன: அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை

இந்து மத ஸ்தலங்கள் கொள்ளைக்கூடாரமாக மாறி விட்டன: அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட  நடிகை

இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டன. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி பிரமுகரும், நடிகையுமான அர்ச்சனா கௌதம் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உத்தரப் பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும், நடிகையுமான அர்ச்சனா கௌதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி வந்தார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு விஐபி டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செஃல்பி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கௌதம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்," இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டன. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறேன். விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்கின்றனர்" என்று அவர் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in