`விக்ரம்' படத்தை இணையத்தில் வெளியிடத் தடை!- ஏர்டெல், ஜியோவுக்கு நோட்டீஸ்

`விக்ரம்' படத்தை இணையத்தில் வெளியிடத் தடை!- ஏர்டெல், ஜியோவுக்கு நோட்டீஸ்

'விக்ரம்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம், வரும் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தினை, இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

"கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களைக் கொண்டு பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இது. இணையத்தில் வெளியிட எந்த அனுமதியும் படத் தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை. அனுமதியின்றி இணையத்தில் படம் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும், இது போன்ற அனுமதியின்றி படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே சட்டவிரோதமாக யாரும் வெளியிடாமல் தடுக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜ்கமல் பிலிம்ஸ், நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்தனர்.

வாதத்தை ஏற்றுக்கொண்டு மனுவை விசாரித்த, நீதிபதி சி.சரவணன், 'விக்ரம்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in