’சட்டாம்பி’ என்ற மலையாள படத்தில் தமிழராகவே நடிக்கிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.
ஆரண்ய காண்டம், பாண்டியநாடு, ஜோக்கர், பேட்ட, ஜெய் பீம் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் குரு சோமசுந்தரம். தமிழ் தவிர மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ படத்திலும் இவர் நடித்திருந்தார். அங்கும் இவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து ’சட்டாம்பி’ என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார். அபிலாஷ் எஸ் குமார் இயக்கும் இந்தப் படத்தில், தமிழராகவே நடிக்கிறார்.
‘‘இந்தப் படத்தின் கதை 1995-96-ம் ஆண்டுகளில் நடந்த ஒரு கொலையை மையப்படுத்தியது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதையை எடுக்கிறேன். 90-களில் ஏராளமான தமிழர்கள், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்தனர். கம்பம்மெட்டு, கூட்டார் உட்பட பல பகுதிகளில் அவர்கள் தங்கினர். அதில் சிலர் அங்கு கஞ்சா சாகுபடி செய்தனர். அப்படிப்பட்ட ஒருவராக குரு சோமசுந்தரம் வருகிறார்.
இந்த கேரக்டருக்கு சரியாகப் பொருந்துபவராக அவர் இருக்கிறார். அவர் கேரக்டர் பெயர் முனியாண்டி. படத்தில் சட்டாம்பியின் நண்பராக வரும் குரு சோமசுந்தரம், தமிழராக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை 1995-96-ம் ஆண்டுகளில் நடந்த ஒரு கொலையை மையப்படுத்தியது. படத்தில் ஸ்ரீநாத் பாசி, செம்பம் வினோத், மைதிலி உட்பட பலர் நடிக்கின்றனர். ஷேகர் மேனன் இசை அமைக்கிறார்’’ என்றார்.