கெளதம் மேனன் இயக்கும் அடுத்தப் படத்தில் விஜய்சேதுபதி- அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது ‘லியோ’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கு அடுத்து அவர் இரண்டு ஹீரோக்கள் கொண்ட படத்தை இயக்க இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் விஜய்சேதுபதி- அபிஷேக் பச்சன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் மூலம் அபிஷேக்பச்சன் தமிழில் நேரடியாக அறிமுகமாக இருக்கிறார். நடிகராக தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கெளதம் மேனன், அந்த கமிட்மெண்ட்ஸ் முடிந்த பின்பு இந்தப் படத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இன்னொரு பக்கம், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அடுத்த பாகம் குறித்தான எதிர்பார்ப்பும் இருக்கிறது. விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.